Tuesday, August 27, 2013

கண்ணீர் அஞ்சலி !

                          

அன்புள்ள அம்மா , அப்பா  ! 
ஆருயிர் நண்பா !

மதிப்பிற்குரிய மாமா ! 
மரியாதைக்குரிய மாப்பிள்ளை !

என் உயிர் காதலியே ! 
என்றும் இனிய காதலா !

மடிந்து போன வாக்கியங்களை - அந்நாளில்
மடியில் சுமந்த கடிதங்களே . . . !

உணர்ச்சிகள் ஊட்டிய வரிகளும்
கனவுகள் கடத்திய காகிதமும்,


அறிவியல் ஆ(தீ)க்கத்தால்


அழிந்து போன உணர்வுகள் போல,

காணாமல் போன என் 
 இனிய கடிதமே உனக்கு  
கண்ணீருடன் அஞ்சலி . . .