Monday, November 18, 2019

Inkem inkem inkem kaavale - தெலுகு பாடலுக்கு என் தமிழ் வரிகள்

ததிகின தக்கஜனு  ததிகின தக்கஜனு
தத்தை உன்னை நினைத்திட்டால் நெஞ்சமெங்கும் ஆனந்தம் 

தவழ்ந்திடும் பிள்ளை கண்டு தானும் அங்கே தாழ்ந்திடும் 
தந்தை முகம் மலர்ந்திடும் தவம் போன்ற ஆனந்தம் 

கன்னி கண்கள் கண்ட நாளே 
கவிதை கரு நாளே 
உன்னில் என்னை கண்ட நாளே
இனி வாழ் நாள் திருநாளே

தேவதை எனை தேடி வந்ததே
தேன் நிலவு கீற்று கொண்டதே

திங்கள் ஒளி எண்ணில் பட்டதும் 
நான் தேவலோகம் ஆளும் அந்த தேவனாகி போனேனே 

ததிகின தக்கஜனு  ததிகின தக்கஜனு
தத்தை உன்னை நினைத்திட்டால் நெஞ்சமெங்கும் ஆனந்தம் 

தவழ்ந்திடும் பிள்ளை கண்டு தானும் அங்கே தாழ்ந்திடும் 
தந்தை முகம் மலர்ந்திடும் தவம் போன்ற ஆனந்தம் 

ஆதி முதல் அடி வரை அழகோ
ஆத்தி அவள் தேகமோ கமுகோ
அவ்விரண்டு அதிசய விடயங்கள்
மடு கொண்ட மலைகளோ 

கரையும் வெண்ணெய் கண்ணங்கள் உனதோ
அதில் கரையும் எண்ணங்கள் எனதோ
அண்ணம் அவள் அசைந்திட காண்கையில்
அடங்கிய தண்டமோ . . .

அலையலையாய் ஆடிடும் கூந்தல் நுனிகள்

அது படரும் மெல்லிய பனி பின் மணிகள்

No comments: