Thursday, November 21, 2019

மலர்களே தொடுத்த மாலை . . .

கற்பனைகளால் கவரப்பட்டு சிந்தனையில் வரையப்பட்ட சிறு கவிதையே இது . . .தவறாய் இருந்தால் தணிக்கை செய்துவிடவும். 




அந்தியும் மசங்கிடுச்சி  - ஆள் 
            அரவம் நின்னுடுச்சி 
ஆலமர பொந்துக்குள்ளே 
            ஆந்தையும் விழிச்சிறுச்சி,

மல்லி மலர்ந்துருச்சி
            மாஞ்சோலை அடங்கிருச்சி,
மஞ்சள்மேனி கொண்ட வஞ்சி 
            மஞ்சம் மேல் படர்ந்திருச்சி,

நூலாடை மேலாடையாய் - பால்மேனி
            படர்ந்திருக்கும் பாலாடையாய்,

ஆடை ஒதுக்கி அருந்தும் 
            அமுத பால் நீயாக,
அன்று வள்ளுவன் எழுத்தில் 
             முறையாய் மூன்றாம் பால் நானாக,

சூடான மூச்சுக்காற்று - சுண்டி 
              இழுக்கும் கூந்தல் வாசம்,
மேடான இரு மலர்படுக்கை  - வெண்டி 
               இழுக்கும் வெளிர்ந்த மேனி.

உச்சி நுகருகையில் உள்போன 
                உன் வாசம் 
 மூச்சி நிலை மாற 
                மேலும் கீழும் முட்டியதே !
தழுவிடும் கரங்கள் தாவி -  தொடர்ந்தது 
                மெதுவாய் பணியை 
விழுதென கோர்த்த உடலால்  - இறந்தது  
                 காற்றும் உடலிடையே! 
    
அணைத்த அழுத்தத்தில் அச்சுகளும்
                  அழகாய் அங்கங்கே பதிந்தனவோ!
  அங்கம் மோதியதில் இருதிடல்களும்
                   இடையே இடம்பெயர்ந்து சென்றனவோ !

செவ்விதழ் படுக்கையின் மேல்
    ஈரிதழ் இடம்பிடிக்க
நாழிதல், நாவும் சேர்ந்து - இட்டது 
    இனிமையாய் கோலம் . . .    

ஆடைபாரம் அறிந்ததில்லை முன்வரை,   
        பேடை உடல் போர்த்திய ஒருநூல்  - மேடை 
தாங்கிய கலன்கள் போல்  -  பெரும் 
       உறுத்தல் இருஉடலின் இடையே  . . . 

காம்புகள் புணர்ந்து  காவியம் இசைத்திட
     விழுந்தாள் மலர்ந்த மாலையாய்  என்னில் ! 
சூடிய மாலை சுவையினை தாங்கி 
         கலந்தேன் பூவோடு தேனாக பெண்ணில் !


No comments: