கற்பனைகளால் கவரப்பட்டு சிந்தனையில் வரையப்பட்ட
சிறு கவிதையே இது . . .தவறாய் இருந்தால் தணிக்கை செய்துவிடவும்.
அந்தியும் மசங்கிடுச்சி -
ஆள்
அரவம் நின்னுடுச்சி
ஆலமர
பொந்துக்குள்ளே
ஆந்தையும் விழிச்சிறுச்சி,
மல்லி
மலர்ந்துருச்சி
மாஞ்சோலை அடங்கிருச்சி,
மஞ்சள்மேனி
கொண்ட வஞ்சி
மஞ்சம் மேல் படர்ந்திருச்சி,
நூலாடை
மேலாடையாய் - பால்மேனி
படர்ந்திருக்கும் பாலாடையாய்,
ஆடை
ஒதுக்கி அருந்தும்
அமுத பால் நீயாக,
அன்று
வள்ளுவன் எழுத்தில்
முறையாய் மூன்றாம் பால் நானாக,
சூடான
மூச்சுக்காற்று - சுண்டி
இழுக்கும் கூந்தல் வாசம்,
மேடான இரு
மலர்படுக்கை - வெண்டி
இழுக்கும் வெளிர்ந்த மேனி.
உச்சி
நுகருகையில் உள்போன
உன் வாசம்
மூச்சி
நிலை மாற
மேலும் கீழும் முட்டியதே !
தழுவிடும்
கரங்கள் தாவி - தொடர்ந்தது
மெதுவாய் பணியை
விழுதென
கோர்த்த உடலால் - இறந்தது
காற்றும் உடலிடையே!
அணைத்த
அழுத்தத்தில் அச்சுகளும்
அழகாய் அங்கங்கே பதிந்தனவோ!
அழகாய் அங்கங்கே பதிந்தனவோ!
அங்கம்
மோதியதில் இருதிடல்களும்
இடையே இடம்பெயர்ந்து
சென்றனவோ !
செவ்விதழ்
படுக்கையின் மேல்
ஈரிதழ் இடம்பிடிக்க
நாழிதல், நாவும் சேர்ந்து - இட்டது
இனிமையாய் கோலம் . . .
ஆடைபாரம்
அறிந்ததில்லை முன்வரை,
பேடை உடல் போர்த்திய ஒருநூல் - மேடை
தாங்கிய
கலன்கள் போல் - பெரும்
உறுத்தல் இருஉடலின் இடையே . . .
காம்புகள் புணர்ந்து காவியம்
இசைத்திட
விழுந்தாள் மலர்ந்த மாலையாய் என்னில் !
சூடிய
மாலை சுவையினை தாங்கி
கலந்தேன் பூவோடு தேனாக பெண்ணில் !

No comments:
Post a Comment