பரட்டை
முடியாடும் பாதி
முடி
காத்தாடும்
அள்ளி சொருகயில - அதுல
நாலு
வீழ்ந்தாடும் .
. .
மூக்குல
நீர் ஒழுகும் - முடி
தாண்டி
எண்ணெயொழுகும்
மெழுகு
மேனியெங்கும்
முத்து
முத்தாய் வேர்வையொழுகும் . . .
சில்லுக்கோடு
கோடு போட்டு
சில்லு
ரெண்டு தேடி எடுத்து - குதிச்சி
நீ சில்லாடயிலே - குதி
கால்
படத்தான் சில்லும் ஏங்கும் . . .
கல்கோனா
ஒன்னு வாங்கி
கடவாயில
ஊறவச்சி - மொதிச்சி
வருகையிலே
கடிச்சி நீயும்
பங்கு
வைக்க . . .
மூணு பங்கு வந்துச்சுன்னு - அதுல
ரெண்டு
எனக்கு நீட்ட
ஒன்ன மட்டும் நான் எடுத்து -
உன்
எச்சிலோடு
கலந்து திங்க
நெனச்சா
மூச்சு நிக்குதடி - தொண்டை
குழியும்
இப்போ விக்குதடி . . .
பருவம்
வந்து சேரவில்லை - அப்போ
பக்குவமும்
நமக்கு இல்லை
பாழா போன மனசு ரெண்டும்
பாலா
தேனா கலந்து போச்சே . . .
பருவம்
வந்து உன்ன சேர - பளிங்கு
கல்லா உருவம் மாற
கூட்டுக்குள்ளே
நீ போகையிலே - என்
கூடு
தனியே ஏங்கியதே !
பத்து நாளோ பாஞ்சி நாளோ
- உயிர்
பட்ட
பாட்டை என்ன சொல்ல
ஒத்தை பனை என் ஓலத்தை
சொல்லும்,
காட்டு
கேணி என் கவலைய சொல்லும்
. . .
சடங்கு
முடிஞ்சி, சந்தனம் பூசி
பட்டுத்தி,
பாவாடை கட்டி
குனிஞ்ச
தல நிமிர்தயில - உன்
குவளை
முகம் பார்த்திருந்தா. . . . .
கல்லுக்கும்
காதல் வரும்
முள்ளுக்கும்
மோகம் வரும்
--- தொடரும் இக்காதல் II - ஆம் பாகத்தில்

No comments:
Post a Comment