Thursday, November 21, 2019

உடன்கட்டை





ஒற்றைக்  குச்சி 
       உள்ளே சில இலைகள் 
பற்ற வைத்துப் பார்த்தேன் 
      பரவச நிலை தெரிந்தது ...

கங்கி நகர கரும்புகை 
        உள் போக
இழுத்து விட்ட மூச்சும்
         இருமலுடன் வெளியேற ....

புற்றும் வளர்ந்தது புறையோடி திரிந்தது .............

பற்ற வைத்த எனைப்பார்த்து 
       பல் இளித்த சாம்பல் சொன்னது 
கொள்ளிவைத்தது நீயா ?
          நானா ? !!!








No comments: