Thursday, November 21, 2019

உனக்காக மட்டுமே!





நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

என்கவி உரிமை
      உனக்கே என்றேன்,
தலைப்பாய் உனை தரவும்
     தயங்கி நின்றாய் . . . !

உரிமையோடு என்னுள்
      ஊடுருவு என்றேன்,
தொடுவதும்   கூட உனை 
      தீட்டு என்றாய் . . . !

பார்த்தால் போதும்

      பசியாருவேன் என்றேன்,
பசித்திரு உன்னால் 
     பயனில்லை என்றாய் . . . !

நிழல் தீண்டல் போதும் 
    உயிர்ப்பேன் என்றேன்,
உறவாட  உன்னோடு
   முடியாது என்றாய். . .!

தொடர்வரிகளாய் தொடரும்

      என் காதல் என்றேன்
 முற்றுப்புள்ளி வைத்து
     முடித்துகொள் என்றாய் . . .  !

என்னுயிர் வேண்டுமா
     எடுத்துக்கொள் என்றேன்,
உயிரால் என்ன முடியும்
    உலகில் என்றாய் . . . !

கவி, காதல், உயிர், உரிமை
    உண்மையே!

என்னோடு நீ இல்லையேல், 

     எதுவும் இனி என்னில் இல்லையே! 






No comments: