பூசணிக்கா(ய்கா)தல்
மும்முறை உன் முகதரிசனம்,
போதும்
என் பூஜை முடிந்தது !
பிறந்த பயன் பெற்றுவிட்டேன்
பிரியுமுன்
சுற்றிவிட்டேன் !
தேவதை உன் சிரம் சுற்றியதால்
தேவனாய் மாறிவிட்டேன் !
கண்ணடி
பட்டதென தானோ - எனை
காசுகள் வைத்து சுற்றினர். . .
என்
கண் உன் அடி படத்தான்
இன்று குருதியொடு கிடக்கிறேன் இங்கே !
--நடைபாதையில்
உடைந்த பூசணிக்காய் ! ! ! !

No comments:
Post a Comment