Thursday, November 21, 2019

கா(ய்) (கா)தல்





பூசணிக்கா(ய்கா)தல்


மும்முறை உன் முகதரிசனம், 
           போதும் என் பூஜை முடிந்தது !

பிறந்த பயன் பெற்றுவிட்டேன் 
       பிரியுமுன் சுற்றிவிட்டேன் !

 தேவதை உன் சிரம் சுற்றியதால் 
           தேவனாய் மாறிவிட்டேன் !

கண்ணடி பட்டதென  தானோ  - எனை 
        காசுகள் வைத்து சுற்றினர். . . 

என் கண் உன் அடி படத்தான் 
        இன்று குருதியொடு கிடக்கிறேன் இங்கே !
       --நடைபாதையில் உடைந்த பூசணிக்காய் ! ! ! !

No comments: