Thursday, May 22, 2014

ஒப்பனைகளின் ஒப்புகை . . .


கவிதை
           உன்  பெயரை உச்சரிக்கும் போது
                 உள்ளூர நான் உணர்வது . . .

சிற்பம் ,
           உன் உருவ நிழல் கூட
                 நிலத்தில் சாய ரசித்தது . . . 

ஓவியம் ,
          உயிர் கொடுக்கும்  தூரிகை  வணங்கி 
                 வாழ்த்தொன்று  வரைந்து கொண்டது  . . .

இம்மூன்றும் உன்னோடு ஒப்பிட 
        இன்று மட்டுமே !

நாளை வேறு என்னவோ !

ஒவ்வொரு நாளும் உன்னோடு
      ஒப்பிடும்  சாக்கில் அவையவை 

தன்னை அழகுபடுத்தி கொள்கிறது ! 

Friday, May 16, 2014

சதி . . .




தந்திரக்காரர்கள் கவிஞர்கள் ! !

எங்கே கவிதை வம்சம் 
       கரு அற்று போகுமோ என பயந்து 


"காதலித்துப் பார்க்க சொல்கிறார்கள் ! ! !"




Wednesday, May 14, 2014

அறிவொளி . . . !



படிப்பறியா தாய்க்கு - பள்ளி 
  சென்று வந்த குழந்தை 
எழுத கற்று கொடுத்தது   

   "பாப்பா" என்று . . .