Thursday, November 21, 2019

விடை காணா வினாக்கள் . . .


அடித்தது வலிக்கவில்லயாயினும் - அம்மா 
       அடித்தால் அழுகை வருவதெப்படி ?

கடித்ததில் எச்சில் இருந்தும் - அக்கா 
    கண்டுக்காமல் வாங்கி தின்பதெப்படி ?
     
மிதித்தது பெரிய கோழியாயினும் - குஞ்சு 
      மிரளாமல் அங்கேயே சுற்றுவதெப்படி ?

உழைப்பவன் உழைத்து ஓடாய் தேய - ஒன்றுமறியா  
       ஊதாரிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதெப்படி ?

காதல் பிறந்ததும் காதலர் யாவரும் - திடீர் 
    கவிஞராய் மாறுவது எப்படி ?

பட்ட காலிலே மறுபடியும் - காயம் 
         பட்டு பட்டு ஆருவதெப்படி?

கெட்ட குடிகளே எப்பொழுதும் - ஊரில் 
       கெட்டு ஒழிவதுவும் எப்படி ?

கைப்பிடி தந்த மரத்தையே கோடாரி - வேரோடு  
    சாய்க்க முயல்வது எப்படி ?

நாள் முழுதும் உழைத்திட்ட ஒருவன்
    நாணலில் கவலையின்றி உறங்குவதெப்படி ?
     
கண் மயங்கி தூங்கியும் பேருந்தில் - ஊர் 
     காணாமலே கண் முழிப்பதெப்படி ?         

உதவ முடிந்த சக்தி  இருந்தும் - சொந்தம் 
      கதவை மூடும் கண்ணியம் எப்படி ?

ஊர், பேர், இனம் அறியா நட்பு  - உயிரில் 
    இரண்டற கலந்து வளருதே எப்படி ?

முறை மாமன் சொந்தமிருக்க - காதல் 
     முரணான சாதிப்பையனோடு வருவதெப்படி?

சில நாள் பழகி சிறகொடிந்த காதலுக்கு - விலையற்ற 
      உயிர் கொடுக்க துணிவதெப்படி  ?

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே - சொன்னவள் 
      எவனோ ஒருவனோடு, மகிழ்ச்சியாய் எப்படி ?

மணமுடிந்த பத்தாம் மாதத்தில் - மழலை 
  ஒன்றை அவள் பெறுவதுவும் எப்படி ? 

போகிற போக்கில் அவள் பார்வையில்பட்டால் 
    விழிநீர் பொங்கி வழிவதுவும் எப்படி ?
  
பதினாறு பொருத்தமும் பொருந்தியும் - சிலருள் 
    வாழ்க்கை பொருந்தா இரகசியம் எப்படி ?

படிப்பும் அறிவும் மிகுதியாய் இருக்க - பணம் 
    படைதவர்கிடையே மட்டும் மணவிலக்கெப்படி ?

எந்த குற்றமும் அறியா பிஞ்சுகள் - சிறு சுற்றமும்  
   இன்றி அனாதையாய் எப்படி ?

தோளில் மார்பில் தாங்கிய பிள்ளைகள் - பெற்றோரை   
    நடுவில் தொலைப்பது  எப்படி ?

போவது சொர்கமே உறுதியாயினும்  - உயிர் 
     போக மறுக்கும் அச்சம் எப்படி ?

இன்னும் விடை காணா வினாக்கள் பல இருந்தும் -  கவிதை 
      கண் மூட முடிந்தது எப்படி ?

9 comments:

shriram said...

Arumai...

Praba said...

Thanks Boss :)

Unknown said...

Oh man this is awesome.

anu said...

Good one praba

anu said...

Good one praba

Praba said...

Thanks for your valuable comments and Encouragement guys., :)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

எங்க கூடவே சுத்துன நீ
இப்படடியெல்லாம் கிறுக்குவதெப்படி ????

Nice Kavithai machi..Expecting more from u...

Praba said...

மச்சி உங்க கூடலாம் சுத்துனதுனால தான் இப்படி ! !

Thanks machi, i'll give my best da.