Thursday, August 18, 2016

நந்தவன நடனம் . . .


வண்டுகள் வாசம் செய்யும் 
வசந்த மலர்கள் வசிக்கும் வனத்தில்,

கண்டு  எதையும்  அறிய முடியா - அக்
காரிருள் ராத்திரி பொழுதில் . . .

படை போல் வரிசை கட்டி 
படர்ந்து நிற்கும் மரங்களின் கீழே,

நெளி நெளியாய் வளைந்து செல்லும் - தார்
 சாலையில் இரு உயிர்களின் பயணம் . . . 


கைகள் இரண்டும் கோர்த்து கொண்டும் 
 கதைகள் ஏதோ பேசி கொண்டும்,

கண்கள் நான்கும் பார்த்து கொண்டும்
காதல் பரி மாறி கொண்டும்,

கணங்கள் கடந்த பொழுதறியாமல்
மனங்கள் இரண்டும் மயங்கிய நிலையில் . . .

மொட்டினை முகர்ந்து செல்லும்
மாலை நேர மனிகாற்றுப் போல்,

பட்டுடல் தொட்டு பார்க்க
முனைந்தஅவன் கைகள் கண்டு

வெடுக்கென தள்ளி விட்டு  - அவள் 
வெகுளியாய் விலகி விழ,

திடுக்கென துள்ளி எழுந்து
திண்டாடிய அவள் உடலை,

படக்கென கைகளில் ஏந்தி
பந்தைபோல் விரல்களால் தாங்கி . . .

இடைகோர்த்து பிடிக்க அவன்கை,
இன்பத்தில் நாணிய அவளை !

பதம் பார்த்து பற்கள் பதிக்கும்
பழம் கொண்ட அணில் போல் அவனும்,

இடம் பார்த்து இதழினை பதிக்க - அவளோ
தடையின்றி தந்தாள் தேனை . .