Wednesday, April 22, 2015

தலை தாழ்த்திய பூ . . . நாணமோ ?



சிந்திய சிரிப்பின் ஊடே
         சிதறா  வெட்கம் மலர,
சிரம் நீ தாழ்த்திய நொடியில்
        சிவந்தது மண்ணும் கண்டு. . .
வஞ்சனை எதற்கு பெண்ணே
      வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு சற்று உன் முகத்தை
    உயிர் பெற வேண்டும் யாவும் . .