Friday, March 28, 2014

வித்தகி . . .









ஒரே செடியில் தான் மலர்ந்தது 
      ஒரே நாரில் தான் தொடுக்கப்பட்டது !

ஒரே கூடையில் தான் அமர்ந்து சென்றது 
        ஒரே கையால் தான் அளக்கவும் பெற்றது !

ஒரே இலைக்குள் தான் சுருடவும் பட்டது 
       ஒருவனிடம் தான் விலையும் போனது  . . .! 

முதல் இரண்டு முழம் சாமிக்கும் 
          அடுத்த இரண்டு முழம் மனைவிக்கும் என 
முறையாய் தான் முழம் அளந்தும் அளிக்கப்பட்டது . . .

அப்படி இருக்க !

ஒரு சேர பக்தியையும் , காதலையும் பரிவர்த்தனை செய்ய . . .
எப்படி முடிந்தது மல்லிகையால் ?