Tuesday, July 3, 2012

என் இனிய அவள் !



என் இனிய அவள் !




நெய்தல் நிலம் பட்ட கதிர்
நீருரிஞ்சி தாகம் தீர்க்க - கொண்ட 
நீர் பெருகிப்பெரும் வெள்ளமாய் 
விரிந்து காண - கார்மேகம் 
உருவாகி கரும்படலமென திரண்டு விழ 
என்னவளின் கூந்தல்தனை நான்
வேறென்ன சொல்லிமாள !!!!

வான் மணந்த வஞ்சியது - வளர்ந்த 
போது சிரித்த முகம் 
தேனிலவு தேயும்போது 
தேம்பியழுது துடைத்த முகம் .....


மழை கொண்ட மேகமது 
                கதிரவனை கையால் மறைத்து
கதிர்வீச்சை தன்னுள் இழுத்து 
                சாரல் வைத்து சற்றே இடை நிறுத்தி 
வர்ணம் ஏழையும் வகைவகையாய் பிரித்து 
                ஒற்றை கணையாய் உருவகித்த 
வில்லோ உனது விழி கொண்ட புருவம் !!!!!


ஆற்றிலே பிறந்து - செம்மண் 
சேற்றிலே வளர்ந்து 
காற்றால் ஈரல் நிரப்பி 
செதிலால் சுவாசம் கொள்ளும் 
செம்மீன் இரண்டும் கொண்ட 
கயல்விழி அவள் விழி ...

ஊர் சுற்றி ,உலகம் சுற்றி 
பாரில் பல காடு சுற்றி 
பசுஞ்சோலை பலவும் சுற்றி 
பனிகாற்று பூவையும் சுற்றி 
தேன் கொணர தேடும் வண்டு 
தேனினுமினிய இதழ் கண்டு 
தேனெடுக்க எத்தனிக்க - இதழ் 
இருகோணம் பிரிய கண்டு 
புன்னகை என்றறியா பேதை வண்டு 
மனமயங்கி மண்ணில் விழ 
என் சொல்லி நான் மலைப்பேன் 
இனிய அவள் இதழ் கண்டு ....


காவியமொன்றில் கண்டேனதை - கலைஞன் 
கவிஞனாய் கரைபுரட்டிய வரிகள்...
தலைவன் தனை பிரிந்து போக 
தலைவியவள் துயரில் ஆழ 
அணையில்லா ஆறாய் மாறி - அவள் 
விட்ட கண் நீருமது 
"மலையேறி மடுவில் விழுந்தது" - உருவகமோ 
உள்ள கிளர்ச்சி கொள்ள 
பெண் திமிரை மலையெனக் 
கண்ட கவிஞன் வரியே அதற்கு சாட்சி...!

வனம் கொண்ட சோலையோன்றில் - வண்டின் 
வருகை யெதிர்நோக்கி நிற்கும் 
தேன் குருதி கொண்ட செண்டு - தாங்கும் 
ஒற்றை காலிலாடி நிற்க 
பருவமதை தடவி செல்ல - விரிய 
துடிக்கும் வென்மொட்டு சாரை 
புது பருவமங்கை பல் வரிசை .....


பளிங்கு கல்லை பக்குவமாயெடுத்து 
பன்னீர் நனைத்த பட்டிலே துடைத்து 
வைரவாய் கொண்ட உளியிலேயுடைத்து
வர்ணமுலாம் தட்டிலே வைத்து 
அளவு வைத்து அளந்து பார்த்து
அதயதை அங்கே பொருத்தி 
செதுக்கியெடுத்த சிற்பமென - செங்கதிர் 
மேனியதை சொல்வேனோவேறொன்றும் !!