அமுதமூட்டி அம்மா காட்டி
அறிமுகமான அழகியவள் !
கையில் பிடித்து கட்டியணைத்து
கண்ணிலிட்டு காதல் செய்த கன்னியவள்!!
வெள்ளியெடுத்து வெண்பால் குழைத்து,
மெல்ல தடவி மெருகு கொஞ்சம் ஊட்டி,
பகலவன் ஒளியை பக்குவமாய் வடித்து,
பனித்துளி சேர்த்து பாவாய் கடைந்து,
அச்சிலிட்டு அழகாய் பொருத்தி ,
அங்கம் கலைந்த தங்கம் அவள் !!
கன்னி கொள்ளும் நாணம் உனை
கவ்வி கொள்ள,
மேகமதன் பின் மறைந்து
முகம் நீ மூடி கொள்ள !
வெட்கம் உனை ஆட்கொண்டு
வெற்றி கொள்ள!
முகம் மறைத்த கணம், உலகம்
முடங்கி கொள்ள!
முகம் காட்டு முழு நிலவே - உலகம்
வரம் பெற்று உயிர் பெறட்டும்!
காவியங்கள் எதுவும்
முடிந்ததில்லை நீயின்றி !
கவிதைகள் எதுவும்
மடிந்ததில்லை உன் பெயரின்றி !!
அறிமுகமான அழகியவள் !
கையில் பிடித்து கட்டியணைத்து
கண்ணிலிட்டு காதல் செய்த கன்னியவள்!!
வெள்ளியெடுத்து வெண்பால் குழைத்து,
மெல்ல தடவி மெருகு கொஞ்சம் ஊட்டி,
பகலவன் ஒளியை பக்குவமாய் வடித்து,
பனித்துளி சேர்த்து பாவாய் கடைந்து,
அச்சிலிட்டு அழகாய் பொருத்தி ,
அங்கம் கலைந்த தங்கம் அவள் !!
கன்னி கொள்ளும் நாணம் உனை
கவ்வி கொள்ள,
மேகமதன் பின் மறைந்து
முகம் நீ மூடி கொள்ள !
வெட்கம் உனை ஆட்கொண்டு
வெற்றி கொள்ள!
முகம் மறைத்த கணம், உலகம்
முடங்கி கொள்ள!
முகம் காட்டு முழு நிலவே - உலகம்
வரம் பெற்று உயிர் பெறட்டும்!
காவியங்கள் எதுவும்
முடிந்ததில்லை நீயின்றி !
கவிதைகள் எதுவும்
மடிந்ததில்லை உன் பெயரின்றி !!

No comments:
Post a Comment