Monday, June 11, 2012

வானழகியே!!!!!!



வானழகியே!!!!!!

அமுதமூட்டி அம்மா காட்டி 
          அறிமுகமான அழகியவள் !
கையில் பிடித்து கட்டியணைத்து 
          கண்ணிலிட்டு காதல் செய்த கன்னியவள்!!

வெள்ளியெடுத்து வெண்பால் குழைத்து,
          மெல்ல தடவி மெருகு கொஞ்சம் ஊட்டி,
பகலவன் ஒளியை பக்குவமாய் வடித்து,
          பனித்துளி சேர்த்து பாவாய் கடைந்து,
அச்சிலிட்டு அழகாய் பொருத்தி ,
          அங்கம் கலைந்த தங்கம் அவள் !!

கன்னி கொள்ளும் நாணம் உனை
          கவ்வி கொள்ள,
மேகமதன் பின் மறைந்து
      முகம் நீ  மூடி கொள்ள !
வெட்கம் உனை ஆட்கொண்டு 
       வெற்றி கொள்ள!

முகம் மறைத்த கணம், உலகம் 
  முடங்கி கொள்ள!

முகம் காட்டு முழு நிலவே - உலகம் 
      வரம் பெற்று உயிர் பெறட்டும்!

காவியங்கள் எதுவும் 
  முடிந்ததில்லை நீயின்றி !
கவிதைகள் எதுவும் 

  மடிந்ததில்லை உன் பெயரின்றி !!



No comments: