கால்நூறாண்டு
கடந்த கன்னிப்பூவே
கறைபடியா வெண்பால் நிலவே,
கண்கொட்ட
தோன்றுமோ உனை - காணும் நாழிகையில்
செயலற்று போவேன் நீ சிந்தும் சிரிப்பினில்,
கைக்குழந்தை
தேகம்,
கற்சிலை வாகும்
- நீ கண்சிமிட்டி
பேசும்போது உறைந்து போகும் என் ஊனும்., ., .,
அகவை ஆனது இருபத்தைந்து என்பதை
ஏற்கமறுப்பர் உன் முகங்கண்டு,
அமுதம் உருக்கிய ஊனி லூற்றாகி,
எண்ணிலா ஏக்கந்தனித்தின்று ஐயைந்தாகி
ஒப்பிலா ஓடமாகி யோடிதிரியும்
பிரியமான தோழிக்கு ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..........

No comments:
Post a Comment