Thursday, November 30, 2017

வள்ளல்

             
அண்டத்தின் அப்பன் 
ஆதவன் அனல லைகளால்

அகிலத்தின் அரசிகள்  
ஏரி கடல் ஆறு புனலோடு

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

கருவுற செய்து வானில் 
கருநீல கருவறை அமைத்து 

குறுமாக்கள் உருவாக்கி 
குட்டி குட்டியாய் பெற்றெடுத்து 

தவழ்ந்தாட  அனுப்புகிறான் 
தரணிக்கு தொடர்ச்சியாய் 

கெடுத்ததில்லை இதுவரை 
கொடுப்பவரே வெய்யோன் மக்கள் 

கர்ணன் மட்டுமன்றி 
கார்மேக துளிகளும் தான் 

அள்ளி கொடுப்பதில் 
அவர்களுக்கும் தான் ஈடுண்டோ ?

குறிஞ்சி குன்றுகளில் ஏறி 
குதித்தாடும் அருவியாய் ஆட 

முல்லை மலர்களில் மறைந்து
ஒளிந்தாடும் ஓடையை ஓட 

மருத மண்ணில் விழுந்து
மின்னும் மணிகளாய் மாற  

நெய்தலோடு நிறுத்தி கொண்ட 
நிலைப்பாடு தான் என்னவோ 

பார்க்காத இடங்கள் எல்லாம் 
பாலையாய் மாறி தான் போனதோ 

வஞ்சனை இன்றி 
வந்து போகும் அன்னையே 

வணங்குவோம் எங்களை 
வாழவைக்கும் உன்னையே 



No comments: