Thursday, August 18, 2016

பலவந்தம் . . .



இரவுப்பயணம்,
ஜன்னலோர இருக்கை,
சத்தமில்லா இரயில் பெட்டி,
சாரலோடு கை கோர்த்த தூறல் . . .

தூறல்கள்  நடுவில்
துள்ளல் போடும் மின்னல்,
மின்னலுக்கு தாளம் போடும்
மிருதங்க இடி . . . 

உன் வரவு என்னோடு
இல்லாமையால்,
இவை யாவையும் ரசிக்க வேண்டிய 
கட்டாயத்தில் . . .  நான் !

No comments: