Thursday, August 18, 2016

துண்டு சீட்டு . . .

அவள் ஆடை பறக்க விட்டு ,
அளவாய் அவளுக்கு கோபம் மூட்டுகிறாய் . . .

அவளுக்கு அளவாய் ,
 எனக்கு அளவுக்கதிகமாய்  . . .

வச்சிக்கிறேண்டா வருண பகவான்,
ஒரு நாள் உன்னை . . .

**************************************************
அவள் தலை சாய்த்து 
       தூங்கு வதற்கென்றே,
கடினமான என் மார்பகத்தை 
        மிருதுவாக்கி கொண்டேன்  . . .

**************************************************

இரு நிமிட இடைவெளியின் - அந்த
அறுபது நொடிகளிலும் வந்து போகும்
ஆறாயிரம் நினைவுகளில்,
ஒன்றில் கூட உன் முகம்
   இல்லாமல் இல்லை . . .


**************************************************

பெற்றவளை பிரிகையில் 
சிரிப்புடனும், 
உற்ற எனை பிரிகையில் 
அழுகையுடனும் 
அவள் விடை பெறுவது  . . .

எனக்கு மட்டுமே வாயக்கப்பெற்ற பேறு  . . .

**************************************************

கை அசைத்து பிரிந்து செல்கயில் . . .

அசைவுகள் இருப்பதாய் நினைத்து
  கொண்டு நீ . . .

அசைவற்று உன் கை 
    நிற்பதை கண்டு,
போகாமல் நில் 
    என்பதாய் எனக்கு  . . . 

**************************************************
அத்தனை பாவனைகளும் 
 அத்துப்படி எனக்கு - தனித்தனியே 

கண்ணீருடன் சிரித்து கொண்டு,
கவலை சற்றே மறைத்து கொள்ளும் 
திறமை மட்டும் கற்று கொடு எனக்கு  . . .

உன்னிடம் காண்பிக்க அல்ல - உன் 
கவலையை புரிந்து கொள்ள  . . .

**************************************************

காயங்களை மறைத்து கொண்டு  - எனக்காய் 
கணம் தோறும் மலர்ச்சியுடன் அவள்   . . .

மலர்ச்சியில் மறைந்து கிடக்கும் 
மர்மங்கள் அறிந்தும்,
அவிழ்த்து அவளை 
அழவைக்க விரும்பாமல்  நான் . . . 

**************************************************

உன் அரவணைப்பில்
   என்னுயிர் நீர்த்துவிடும்
        ஆசையில்லை எனக்கு . .

போகும் இடத்தில்உனை போல்,
புதையல் கிடைக்கா தென்பதை அறிவேன் . . .

**************************************************





No comments: