அணுவில் தொடங்கி
அண்டம் கலக்கும் - உயிரை
பிண்டம் கொடுத்து
பெற்றொதொரு உறவு . . .
பிண்டம் கொண்டு
பிறந்த பின்னே - தமையாள்
செந்நீர் சொந்தம்
சேர்ந்ததோர் உறவு . . .
செந்நீர் சொந்தம்
சேரா ஒன்று - உடல்
சார்ந்து உயிர்
கலந்ததொரு உறவு
. . .
கொஞ்சி
மகிழ - கொண்ட
நெஞ்சம் நெகிழ
பிஞ்சு
மகளாய்
பிறந்ததொரு உறவு . . .
பந்தம்
இன்றி
பேசிப் பழகி
தோழமை
கொண்டு
தொடங்கியதோர் உறவு . . .
அத்தனை
உறவும்
அடங்கிய தவளில் - இன்னும்
எத்தனை
சொல்லிட
விளங்கிடும் பெருமை . . .
"மாதராய் பிறந்திடவே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா ! ! ! "
சங்க கால
சபைகளில் பார்த்தோம்
பண்டைய
கால
போர்களில் பார்த்தோம் . . .
மடமையும், சடங்கும்
மறைத்திட்ட உண்மை
. . .
ஆதிக்கம் செலுத்தி
அணைத்திட்டதவளை . . .
கைகள்
மறைத்தால்
கதிரவன் மறையுமா ?
கண் மூடி கொண்டால்
கணங்கள் தான் இருட்டாகுமா ?
தக்கன
பிழைத்துவாழ்தல்
தமக்கென கொள்ள முடியாது இனி ! !
மூடிய
கதவுகள் - எல்லாம்
முறியடித்தாயிற்று . . .! !
முடக்கிய கைகள் - என்றோ
முடுக்கி விட்டாயிற்று . . .! !
கழனி முதல்
கணினி வரை .
. .
முன்னுரை எழுதி
முன்னேரிவிட்டனர் . .
.
செய்த
செயல்
யாவுமே சாதனையே பெண்ணே . . .
துணுக்கை தான் இது
தொடர்ந்தால் இன்னும் நீளும்
. . .
உன் அன்பை போலவே .
. . .

No comments:
Post a Comment