ஞாபகம் வருதே !
நாதாங்கி கதவ சாத்தி
நாலாபுறமும் பார்வைய சுழட்டி
ஆத்தாள கூப்பிடும் சாக்குல
ஆத்துபுறம் போறத சொன்ன . . .
கஞ்சியிலே பொதஞ்ச சோற
கைவெரலால் பெசஞ்சு கரைக்க
காதல் கொண்ட சோறும், நீரும்
கரைஞ்சி கழனி நீரா ஆச்சே . . .
ஆன நீரும் பானை சுத்த
அள்ளி குடிக்க கையில் எடுக்க
வாசபுறம் அழைச்ச குர
அவதானே சித்தம் சொல்ல . . .
பசி போன எடமும் தெரியல
பானை போன தடமும் தெரியல
கை கழுவவும் மனசுக்கு தோனல
கால்கள் போகும் வேகமும் புரியல . . .
சோத்து பானை தலையிலாட
சேர்ந்த மூடி சலங்கயாட
தண்ணீ கொடம் இடுப்பிலாட
கூந்தல் குஞ்சம் கொசுவமாட . . .
பின்னால வந்தவன் என்னை,
கண்ணால கூப்பிட நீயும்,
முன்னால போகிற போக்குல - உன்
முடி வாசம் தீண்டிச்சி மெதுவா . . .
அறியாம எனையும் நானே
தறிகெட்ட ஆறாய் ஆனேன்
பொறி தொட்ட எலியா துடிச்சி
புள்ளரிச்சு பூத்து போனேன் . . .
சொட்டும் நீரா தாவணி சரிய,
பட்டுவிடாம பாவாடை இருக்க,
இடுக்கில் பார்த்த இடமது இழுக்க,
இடுப்பை கண்டு நான் ஏக்கமாய் சிரிக்க . . .
அழகாய் கோபம் நீ மூக்கினில் காட்ட
அதற்குள் தாவணி அழகினை மூட
பேசி ,சிரிச்சி போனது இருக்கே
அன்பே அது உனக்கு ஞாபகம் இருக்கா . . . ?
சோடிக் கிளி கொஞ்சியத பார்த்து
காட்டு புறாக் காதலை பார்த்து
அக்கம் பக்கம் ஆளுங்களை பார்த்து - அன்பே
அங்கம் தொட்டது ஞாபகம் இருக்கா ?
கருக்கருவா கருத பார்த்து
கட்டியணச்சி அறுத்தது போல
வரப்போரம் வந்தவ உன்னை
வாரி அணைச்சது ஞாபகம் இருக்கா ?
வெக்கமும் , பயமும் சேர்ந்து வந்ததும்
வெடுக்குனு என்னை நீ தள்ளி விட்டதும்
அம்மானு அலறி நான் வாரில விழுந்ததும்
சத்தம் அடக்க நீ எம்மேல சரிஞ்சதும்
உயிரே , உனக்கு ஞாபகம் இருக்கா ?
--- தொடரும் இக்காதல் III - ஆம் பாகத்தில்

No comments:
Post a Comment