Friday, August 7, 2015

நெஞ்சமெனும் மஞ்சம் தருவேன் . . .



தாழம்பூ தண்டினை கொய்தேன்,
          தாழ்வாரம் அதைகொண்டு படைத்தேன்
 . . .

கார்கால காற்றினை கவர்ந்தேன்
         கயிறினை அதனினில் திரித்தேன் . . .

பஞ்சது பாரமாய் இருக்கும் 
         பட்டுடல் பட்டிடின் அதிலே,

பனித்துளி போர்த்திய பூவின் ,
        மணி இதழ் தொட்டிலுக் கிட்டேன் . . .

இவை செய்தும் அவளதை விரும்பா 
       முடி கொண்ட மார்பினில் சரிந்தாள்  - என்னில் . . . 

கோதிய கரங்களை கொண்டு 
      குளிர்ந்த அவள் சிரத்தினை நிமிர்த்த . . . 

கோடி கொட்டி கொடுத்தாலும் தகுமோ? உன் 
       மேடு கொண்ட மார்புக்கு உலகில் . . . 

சொர்கமே இதுவன்றோ எனசொல்லி 
     சொக்கினாள் மறுபடி நெஞ்சில்  . . .

No comments: