Sunday, July 26, 2015

தொலைவினால் தொலைந்தவை . . .






அம்மாவோடு அலைபேசியில் 
    அந்தி நேரம் பேசுகையில் . . . 

அரசல் புரசலாக விழும் 
   ஆட்டுக்குட்டி சத்தமும்,

குப்பைகள்  கிளரும் கோழி 
   குஞ்சுகளின் கொஞ்சலும் ,

கூட்டினில் கோஷமிடும் 
  குருவிகளின் இரைச்சலும்,

சொந்த ஊர் 
    சோலைக்குயில் பாட்டும்,

இன்னும், இன்னும் பரவசமடைய வைக்கிறது  . . .




No comments: