Wednesday, December 25, 2013

விழித்துக்கொள்




உனக்கான பசி - நீ 
 உண்டால் தான் தீரும் 
உனக்கான துயர்  - உன்னால் மட்டுமே 
  உள்ளுணர முடியும்  . . . 

துடைக்க கரங்கள் மறந்தபோது 
 துளி துளியாய் கண்ணீர் எதற்கு . . .?

மூச்சடக்க முடிந்த மட்டும் - உனை 
  மூழ்காமல் காக்க நினைப்பர் 
மூச்சவர்க்கு தேவையெனில் - உன் 
  மேல் தூக்கி கால் வைப்பர் . . .

அன்பு, பாசம், காதல்
  பயிரிட்டது பலனுக்காகவே . . .
கஞ்சி, காசு, காமம் 
  அறுவடையில் நீ அறிவாய் ! 

அன்பை அள்ளிக் கொடுத்தாயின் 
  அடிமையென நகைப்பர் . . .
பாசம் வைத்தாயின் உன்னை 
  பணிய வைத்து அழகு பார்ப்பர் . . . 

எரிக்கப்பட்ட தீக்குச்சிகள் - தூர
  எறியபட்டவையே அன்றி ஏற்கப்பட்டதன்று !

பற்றவைக்கும் வரை மட்டுமே - நீ 
  பந்தமாய் இருப்பாய்
பற்றியதும் விரலுக்கும் - நீ
  பாரமென ஆவாய் !

உலக நியதியை உன்னிப்பாக 
 எண்ணிப் பார்
நல்லவன் வீழ்த்தப்படுவான்
  வல்லவனே வாழ்தப்படுவான் !

நிழலும் உன்னோடு 
  நிஜமாய் நடைபோடுவதில்லை . . .

வெளிச்சம் விளக்கில் இல்லையேல் 
  வெற்றிடம் மட்டுமே உன்னோடு அங்கே !

எண்ணிக்கொள் ,

வாழ வக்கத்து வாழ்பவனுக்கு 
  வானளவு வாய்ப்புகளும் சிறு வைக்கோல் பதர் தான் . . .    

வாழ்வில் வாஞ்சை கொண்டு போராடி பார் - சிறு 
  வைக்கோலும் உனக்கு வாள் போல் நிற்கும். . . 

உனக்கான பலமோ,பலவீனமோ
  உன்னால் வகுக்கப்பட்டதே !

உனக்கான எல்லாம் 
  உன்னால் உருவானதே !

விடியும் வரை விழித்திரு - முடியாவிடில் 
   உறங்குவதை நிறுத்திடு . . . 


1 comment:

Unknown said...

Nalla irundhadhu praba