Wednesday, July 31, 2013

விதி !


இரு வேறு கொடிகள் , இரு வேறு பூக்கள் 
இலைகளின் இடையே ஒன்றாய் மலர்ந்தது,

காற்றில் ஆடி, கவிதை பாடி 
மகரந்தம் தூவி, மழைகளில் நனைந்து என

மறக்க முடியா நாழிகைகள் பல 
குறிப்பேடுகளில் குடியேறியது . . . 

முகம் பதிந்து, முத்தம் பகிர்ந்து 
தோளில் சாய்ந்து தொடர்ந்தது காதல் . . .

ஆடி பாடி அகம் மகிழ்ந்து 
அணைத்துக்கொண்டு அரங்கேறியது காதல்  . . .

அத்தனையும் ஆசை படவில்லை ஆண்பூ 
உயிருக்கு மேலாக அதனுள் பெண்பூ . . . 

செழிப்பாய் ஒரு கொடி , சிவந்த பூ கொண்டு 
இரண்டின் இடையே புதிதாய் மலர்ந்தது ,

தாங்கிய கொடியின் தவிப்பினை போக்க 
சேர்ந்தது பெண் பூ, புது கொடி பூவோடு . . .

சொந்த காலில் நின்றாலும் ஆண் பூ 
செழிப்பின்றி போனதால் வாழ்வின்றி போனது  . . .

புது பூவோடு மனம்கோர்த்த பெண்பூ 
கவிதை பாடிட, மகிழ்ந்தது ஆண் பூ ,

காலை புணர்ந்தது , காற்றும் அடித்தது 
கண் விழித்த போது அங்கே 

கருகி கிடந்தது ஆண் பூ கீழே . . .




No comments: