Thursday, January 3, 2013

புறக்கணிப்பு ! ! !





காலை புணரும் கதிர்கள் 
     காலை இடரும் வழிக்கல்,

கடந்து செல்லும் வாகனம் 
     காதில் ஒலிக்கும் ஒலிப்பான் 

பாடி செல்லும் பறவை - அதை 
     பார்த்து ரசிக்கும் மழலை 

கூவி செல்லும் பூக்கூடை  - உள்ளே 
     குவிந்து கிடக்கும் வாசனை 

ஒற்றையாய் நிற்கும் ஒளிகம்பம்  - அதில் 
     ஓடி விளையாடும் ஊர்க்குருவி

அழுது தேம்பும் பள்ளிப்பிள்ளை - அவனை 
      அடிக்க ஓங்கும் தாயின்கை

ஜீன்ஸில் மினுக்கும் சிவந்த பெண்  - அவளை 
     ஜாடையில் ரசிக்கும் சாலை பையன் 


இதில் எதையும் ரசிக்கமுடியவில்லை ..................


கையில் ஸ்மார்ட்போன்  (Smartphone)

No comments: